Homeசெய்திகள்திருநெல்வேலி அரசு வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.60,000 வரை சம்பளம்!

திருநெல்வேலி அரசு வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.60,000 வரை சம்பளம்!

திருநெல்வேலியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 80 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்ற விவரத்தை பார்ப்போம்.

தமிழக அரசு பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. குறிப்பாக, மாவட்ட ரீதியாக பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 80 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு வேலைவாய்ப்பு: எந்தெந்த பணியிடங்கள்?

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன. இவை முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ, முன்னுரிமையோ, சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 6ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம் : திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மொத்தம் 80 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, மருத்துவ அதிகாரி, நகர்ப்புற சுகாதார செவிலியர், லேப் டெக்னீஷன், சுகாதார ஆய்வாளர், ஆலோசகர், ஸ்டாஃப் நர்ஸ், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் / துணைப் பணியாளர், தூய்மை பணியாளர், காவலாளி, சுகாதாரப் பணியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

திருநெல்வேலி அரசு வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு என்ன வாய்ப்பு?

கல்வித்தகுதி – இந்த பணியிடங்களை பொறுத்தவரை ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதி மாறும். அந்த வகையில், ஓட்டுநர் பணிக்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி படித்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். dental assistant பணிக்கு 8ஆம் வகுப்பு மற்றும் பல் மருத்துவத்தில் அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. multi task worker 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். sanitary worker பணிக்கும் 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், cleaner, security, multi purpose hospital worker பணிகளுக்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.

மாத சம்பளம் – மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளத்தை பொறுத்தவரை ஒவ்வொரு பணிக்கு வேறுபடும். அந்த வகையில், sanitary worker, security, cleaner, multi purpose worker ஆகிய பணிகளுக்கு மாதம் ரூ.8500 சம்பளம் வழங்கப்படும். ஓட்டுநர், dental assistant பணிக்கு மாதம் ரூ.13500 வழங்கப்படும். இப்படியாக ஒவ்வொரு பணிக்கும் மாத சம்பளம் மாறுபடும். மாத சம்பளம் தொடர்பாக முழுமையாக அறிவிப்பை tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை – மேற்கண்ட பணிக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுபவார்கள். இந்த பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

துறை சுகாதாரத்துறை
பணியிடம் திருநெல்வேலி
காலிப் பணியிடங்கள்
80
மாத சம்பளம் ரூ.60,000 முதல் ரூ.8500 வரை சம்பளம்
கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கல்வித்தகுதி பணிக்கு ஏற்ப மாறுபடும்
விண்ணப்பிக்கும் முறை Tirunelveli.nic.in
விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 5 வரை
நிபந்தனைகள்
திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்பப்படும் பணிக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள். இப்பணியிடங்கள் எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (undertaking) அளிக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?
திருநெல்வேலி மாவட்டத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்து உரிய முகவரிக்கு ஜூன் 5ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாவட்ட சுகாதார அலுவலகம், எண்.16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு, சமாதானபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
விண்ணப்ப படிவத்துடன் பிறப்பு சான்றிதழ், 10,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், முகவரிச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், அனுபவ சான்று போன்றவற்றை விண்ணப்ப படிவத்துடன் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை